உதவ யாரும் முன்வரவில்லை.. -கொரோனாவால் இறந்த மகளை தோளில் தூக்கிச்சென்று அடக்கம் செய்த தந்தை
கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது 11 வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு தகனம் செய்வதற்கு சென்ற தந்தையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திலிப் என்பவரது மகள் சோனுக்கு அஜூரண சிக்கலுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகத் தெரிகிறது. அதனைத்தொடர்ந்து த்னக்கு தெரிந்த ஒருவரின் பரிந்துரையின் படி, திலிப் மகளை பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலில் உள்ள ஒரு மருத்துவமனையில்அனுமதித்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்….