`உழைக்க தெம்பிருக்கு; கைகொடுத்தா குடும்பமே பிழைச்சிக்கும்’- இருளை எதிர்த்து போராடும் மாற்றுத்திறனாளி
`நல்லா போய்க்கிட்டு இருக்குற வாழ்க்கைய, ஒரு விபத்து ஒரு நொடியில புரட்டிப்போட்டுடும்… எனக்கும் அந்த மாதிரிதான் நடந்துச்சு. ஆனா, அதை விபத்துன்னு சொல்ல முடியாது. பல வருஷ அலட்சியம், இயலாமையோட `கொடும்’ விளைவு. என்னன்னு கேட்குறீங்களா… என்னால இப்போ எதையும் பார்க்க முடியாது. ஆமா… எனக்குப் பார்வை சுத்தமா போயிடுச்சு. ஊருக்கே பொதுவா சாய்ந்த `பொழுது’, இனி நமக்கு மட்டும் விடியப்போறதில்லைன்னு தெரியவந்த அந்த நிமிஷம்… என்னோட வாழ்க்கையே அஸ்தமனமாகிடுச்சு. சின்ன வயசுல இருந்து பார்த்து பழகின…