மாஞ்சோலை: கால் நூற்றாண்டு கடந்தும் தொடர்கிறது ஆறாத வடுக்களின் ரணம்!
போராட்டக்காரர்களின் ஆதங்கத்தை நிர்வாகத்தின் அதிகார மையத்துக்கு எதிராக முழுமையாக வெளிப்படுத்த இயலவில்லை. அந்த விரக்தியானது அவர்களின் சக தொழிலாளர்களுக்கு எதிரான வன்மமாய் வெளிப்படத் துவங்கியது. எஸ்டேட்டில் பக்கத்து வீடுகளில் இருந்து அரிசி, சோறு, குழம்பு, காய்கறி, சீனி, மண்ணெண்ணெய், கத்தி, கோடாலி, விறகு, டார்ச், சிரட்டையில் தீ கங்கு என அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றையும் இலவசமாகவோ, அவ்வப்போது கடனாகவோ, பண்ட மாற்றாகவோ பெற்றுக்கொள்வது சாதாரண நிகழ்வு. விடுமுறை நாட்களில் அந்த லயத்தில் உள்ள சிறுவர்கள் எல்லோரும்…