ரஷ்ய ராணுவத்தில் சிக்கிக்கொண்ட இந்திய இளைஞர் உயிரிழப்பு… போரில் கொல்லப்பட்டாரா?!
துபாயிலிருக்கும் ஃபைசல் கான் என்பவர் மும்பையைச் சேர்ந்த நபர்களுடன் சேர்ந்து, ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் நல்ல வெளிவாங்கித் தருவதாக தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த நபர்களை ஏமாற்றிக் கூட்டிச் சென்றதாகவும், அங்கு அவர்கள் ராணுவத்தில் கட்டாயப்பணியில் அமர்த்தப்பட்டிருப்பதாகவும் AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இந்திய இளைஞர் முகமது அஸ்ஃபான் அதோடு, அவர்களை இந்தியாவுக்கு மீட்டு வருமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதமும் எழுதியிருந்தார். அதையடுத்து, ரஷ்யாவில் சிக்கியிருக்கும் 20 இந்தியர்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…