“பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு உதவியது எஸ்பிஐ வங்கி…” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். திருக்கோணமலையில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளையைத் திறந்து வைத்து, சர்வதேச வர்த்தகத்தில் பெருநிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் வங்கியின் பங்கைப் பாராட்டினார். நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் அவருடன் இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கான இந்திய கமிஷனர் கோபால் பால்கே மற்றும் எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா ஆகியோரும் கலந்துகொண்டனர். திருகோணமலையில் வங்கி கிளையைத் திறந்து…