கார்த்திகை தீப விழா மகத்துவங்கள்: இந்த விழா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?
எது படைத்ததோ எது காக்கிறதோ எது அழிக்கிறதோ அந்த மகாஜோதியை வணங்குகிறேன்! இதுவே நமது தர்மத்தின் அடிப்படை வழிபாடு. வேதங்களும் புராணங்களும் வலியுறுத்துவது இதையே. சகல மதங்களும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வது ஒளி வழிபாட்டையே. பஞ்ச பூதங்களில் ஒளியான நெருப்புக்கு மட்டுமே ஒரு பெருமை உண்டு. அச்சமூட்டும் நெருப்பே, ஒளியானால் அச்சத்தை விலக்கவும் செய்யும். ஒளியின்றி எதையும் பார்க்க முடியாது; அதேபோல் உள்ளத்தில் ஒளியின்றி எதையும் உணரவும் முடியாது. ஒளியே ஆதாரம், அதையொட்டியே சிருஷ்டி தொடங்கியது. ஒளியான…