“பெருமாள் விழாக்கோலம்… சித்தர்கள் தவக்காலம்… பாவக்கணக்குப் பரிகாரம்…” – சித்ரா பௌர்ணமி சிறப்புகள்!
தமிழகத்தில் நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்களே. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியையொட்டித் திருவிழாக்கள் கொண்டாடுவது தமிழர் மரபு. அவ்வாறு அவர்கள் கொண்டாடிய பௌர்ணமித் திருவிழாக்களில் முக்கியமானது சித்ரா பௌர்ணமி. கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, நதிக்கரை நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கலாம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பல்வேறுபட்ட ஆன்மிக வழிபாடுகளுக்கும் உகந்த இந்தச் சித்திரை முழுநிலவு நாளின் சிறப்புகள் குறித்துப் பேராசிரியர் சண்முகத் திருக்குமரன் அவர்களிடம் கேட்டோம். ஆன்மிகச் சொற்பொழிவாளர் சண்முகத் திருக்குமரன் “தற்போது வரையிலும் ஆற்றங்கரைப்…