கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன்: குழந்தை உயிரிழப்பு; மாணவி கவலைக்கிடம்!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், காதலனே பிரசவம் பார்த்ததால் கல்லூரி மாணவிக்கு குழந்தை இறந்து பிறந்தது. இந்நிலையில் ஆபத்தான நிலையில் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவியும், அவரது உறவினரான அதேபகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவரும் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும், அப்பெண் கர்ப்பிணியானார். நிறைமாத கர்ப்பிணியான அப்பெண்ணை, சவுந்தர் ஈகுவார்பாளையம் பகுதியில் உள்ள காப்புக்காட்டுக்கு அழைத்துச் சென்று பிரசவம் பார்த்ததாகக் கூறப்படுகிறது. அப்போது குழந்தையின் கை…