சமூக விலகல் எங்கே?: கூட்டத்தால் வழிந்த விழுப்புரம் மீன் மார்க்கெட்!
இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தடை இல்லை என்றும், பொதுமக்கள் சமூக விலகலுடன் கடைகளுக்கு சென்று வரலாம் என்றும் கூறப்பட்டது. அதன்படி பல இடங்களில் காய்கறி கடைகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்கும் இடங்களில் இந்த சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வந்தாலும் நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் இருந்தே வந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல் தேவையின்றி சாலைகளில் நடமாடுவதைத் தடுக்க நேரக்கட்டுப்பாடு நடவடிக்கையை தமிழக அரசு…