`குறுகிய காலத்தில் அதிக பணம்..!’ – ராமநாதபுரம் போலீஸில் சிக்கிய ஆன்லைன் மோசடிக் கும்பல்
`குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம்’ என ஆசை காட்டி பல லட்ச ரூபாய்களை ஆன்லைன் மூலம் அபகரித்த மோசடிக் கும்பலைச் சேர்ந்த இருவரை, ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். ஆன்லைன் மோசடிக் கும்பல் பயன்படுத்திய மடிக்கணினிகள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் காவலராகப் பணிபுரியும் சுரேஷ், இவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக எண்ணில் தொடர்புகொண்டு, கீழக்கரை பகுதியைச் சேர்ந்த மக்கள், சர்வதேச மோசடிக் கும்பலிடம்…