Mohit Sharma: `2,W,W,W1,W1,0′ – நெட் பௌலர் டு ஆட்ட நாயகன் – சிதையா நம்பிக்கையின் கதை!
‘இப்போது இங்கே இந்தப் போட்டியில் நடந்த எதையுமே என்னால் நம்ப முடியவில்லை. எல்லாமே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது.’ அந்த கடைசி ஓவர் கொடுத்த பேரதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் பேசியிருந்தார் கே.எல்.ராகுல். ராகுல் மட்டுமில்லாமல் அநேகமாக லக்னோ Vs குஜராத் போட்டியை பார்த்த அத்தனை பேரும் இதே மாதிரியான உணர்வோடுதான் உறைந்து போய் இருந்திருப்போம். நமது சிந்தையின் மீது அத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது மோகித் சர்மா வீசிய அந்த கடைசி ஓவர். மோகித்தே ஒரு அதிசயம்….