4 டன் மீன்களுடன் கடலில் தவிப்பு.. ஆட்சியர் உதவியால் கரை இறங்கிய நாகை மீனவர்கள்!
கொச்சினிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற நாகபட்டினம் மீனவர்கள் மூக்கையூர் துறைமுகத்தில் கரையிறங்க அனுமதி மறுப்பு. இதனால் பாம்பன் துறைமுகத்திற்கு வந்த மீனவர்கள் இன்று காலை கரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தனிமைப் படுத்துவதற்காக திருப்புல்லாணி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நாகை மீனவர்கள் ராமேஸ்வரம் வேர்க்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அருளானந்தம். இவருக்குச் சொந்தமான விசைப்படகில் நாகபட்டினத்தைச் சேர்ந்த ராகவன், நிவாஸ், ராஜா, சுப்பிரமணியன், பிரதீஸ், சக்திவேல், வினித் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த விஜய் ஆகியோர்…