கொரோனா வார்டில் அனுமதித்த ஏழுபேர் மரணம்.. அறிக்கையில் சந்தேகம் எழுப்பும் தி.மு.க எம்.எல்.ஏ!
நாகர்கோவிலை அடுத்துள்ள ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா ஐசோலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்ட ஏழுபேர் இதுவரை மரணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் இரண்டு வயது குழந்தை உள்பட மூன்றுபேர் மரணம் அடைந்தனர். அவர்கள் மரணத்துக்கு கொரோனா காரணமல்ல, வேறு நோய்கள் காரணம் என சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஏழுபேர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் நாகர்கோவில் எம்.எல்.ஏ-வுமான சுரேஷ்ராஜன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். நாகர்கோவிலில்…