விழுப்புரம்: போராடிய கிராம மக்களிடம் தடித்த வார்த்தை… மீண்டும் சர்ச்சையில் அமைச்சர் பொன்முடி!
“மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல தான் இருக்கிறது என்னுடைய நிலைமை. நாள்தோறும் காலையில், நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. என் உடம்பை பாருங்கள்” – என்று தி.மு.க-வின் 15-வது பொதுக்குழுவில் தனது மனக்குமுறல்களை வெளிப்படையாக கொட்டி தீர்த்திருந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இவ்வாறு அவர் நொந்து போய் பேசுவதற்கு சில முக்கிய தி.மு.க…