`நாடாளுமன்ற கட்டடம் வேண்டாம், தடுப்பூசிக்கு நிதி ஒதுக்குங்கள்’ – மோடிக்கு கடிதம் எழுதிய ஜோதிமணி
‘ஆடம்பர திட்டங்களை விடுத்து, கொரோனா தடுப்பூசி உற்பத்தியை பெருக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து வயது மக்களுக்கும் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று பிரதமர் மோடிக்கு, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடிதம் எழுதியிருக்கிறார். ஜோதிமணி இதுகுறித்து, பிரதமர் மோடிக்கு, ஜோதிமணி அனுப்பியுள்ள கடிதத்தில், “நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பல நகரங்களில் நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த நிலை தொடர்ந்து மோசமாகிக்…