`மொத்தமா சிக்கிடாதீங்க; வீட்டுக்குள்ளேயே இருங்க..!’- கரூர் இளைஞர்களின் நூதன #Corona விழிப்புணர்வு
‘நீங்கள் அனைவரும் வீட்டுக்குள் இருந்தால், எமனிடமிருந்து தப்பிக்கலாம். நீங்கள் உள்ளே இருந்து, கொரோனாவை எமனிடம் ஒப்படையுங்கள்’ என்று இரண்டு இளைஞர்கள் எமன், சித்ரகுப்தன் வேடமிட்டு மக்களிடம் கொரோனா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது, கவனத்தைப் பெற்றிருக்கிறது. மாயக்கண்ணன், விஜயகாந்த் நூதனப் பிரசாரம் கரூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையாக இருக்கிறது, கடவூர். இந்த ஊரைச் சுற்றி, 32 குக்கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களைச் சுற்றி, இயற்கையே வட்ட வடிவில் மலைகளை அமைத்துள்ளது. வெளியிலிருந்து இந்த 32 கிராமங்களுக்கும் சென்று…