`கல்லூரியில் சேர சாதிச் சான்றிதழ் தர மறுப்பு; தற்கொலை செய்த மாணவி’- தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
திருவண்ணாமலையில் சாதிச் சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் மறுத்ததால், கல்லூரியில் சேர முடியவில்லை என்ற விரக்தியில் பட்டியலின மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்திருக்கிறது. திருவண்ணாமலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் இது தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், எடப்பாளையம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த முருகன்-சரோஜா தம்பதியின் மகள் ராஜேஸ்வரி. முருகன் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பன்னிரண்டாம் வகுப்பில் 375…