“கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும்” – ரஷ்யா விடுத்த எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்தால் உலகளவில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 300 டாலராக உயரலாம் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக், “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பது உலகளாவிய சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் விலை இருமடங்காக அதிகரித்து கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 300 டாலராக உயரலாம். மேலும் ஜெர்மனிக்கான முக்கிய எரிவாயு குழாய் திட்டமும்…