கொரோனாவால் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வீழ்ச்சி : இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத சரிவு
கொரோனா எதிரொலியால் இந்திய பங்கு சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை இன்று சந்தித்துள்ளன. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று ஒரே நாளில் 3,934.72 புள்ளிகள் சரிந்து 25,981.24 புள்ளிகளுடன் நிறைவடைந்தன. இதேபோன்று தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி 1,135.20 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 7,610.25 புள்ளிகளுடன் முடிந்தது. இது இந்திய பங்கு சந்தைகள் காணாத வரலாற்று சரிவாகும். இன்றைய வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 4,305.13 புள்ளிகள் அல்லது 13.49% சரிந்து 25,880.83…