வாரத்தின் முதல் வணிக நாளான இன்று கடும் சரிவுடன் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சற்று முன் 1,576 புள்ளிகள் சரிந்து 52,757 புள்ளியில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 446 புள்ளிகள் சரிந்து 15,798 புள்ளிகளில் வர்த்தகமானது.
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன என்று வெளியான தகவலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் பங்குச்சந்தைகளிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.