மாடித்தோட்டம் அமைக்க A to Z வழிகாட்டல்கள்; பசுமை விகடன் நடத்தும் நேரடி பயிற்சி!
நஞ்சற்ற காய்கறிகள், கீரைகள், பழங்களை உண்ண பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கு வடிகாலாக இருந்து வருவது மாடித்தோட்டம். இந்த மாடித்தோட்டத்தை அமைப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் அதை எப்படி அமைப்பது? பராமரிப்பது, செடிகளை, விதைகளை எங்கு வாங்குவது என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. மாடித்தோட்டத்தில் ஏ டூ இசட் தகவல்களை தெரிந்துகொள்வதற்காக பசுமை விகடன், இந்திரா கார்டன்ஸ் இணைந்து வழங்கும் வீட்டிலும் செய்யலாம் விவசாயம் என்ற தலைப்பில் ஜனவரி 28-ம் தேதி சென்னை…
காலிங்கராயன் தினம்: முளைப்பாரி எடுத்து, கும்மி கொட்டி நன்றி செலுத்திய விவசாயிகள்!
பவானி ஆற்றையும், நொய்யல் ஆற்றையும் இணைக்கும் வகையில் நதிநீர் இணைப்புக்கு முன்னோடியாகவும், தரிசாக கிடந்த பூமிகளை வளப்படுத்தும் நோக்கத்தோடு 1,271 ஆம் ஆண்டு காலிங்கராயன் வாய்க்கால் வெட்டும் பணியை அப்போதைய பூந்துறை நாட்டின் ஜமீனாக இருந்த காலிங்கராயன் தொடங்கினார். சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்து சிரமப்பட்டு காலிங்கராயன்பாளையத்தில் இருந்து ஆவுடையார்பாறை வரையிலும் 90 கி.மீ. தூரத்துக்கு வெட்டி முடிக்கப்பட்ட காலிங்கராயன் வாய்க்கால் 1,283 ஆம் ஆண்டு தை 5ஆம் தேதி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இந்த தினத்தையே காலிங்கராயன்…