டெல்லியின் காஜிபூரில் புத்த பஜார் எப்போதும் கூட்டமாக இருக்கும் பகுதி. நேற்று இரவு 9:30 மணியளவில் கூட்ட நெரிசலான மார்க்கெட்டில் வேகமாக வந்த டாக்ஸி ஒன்று 15 பேர் மீது மோதி வேகமாகச் சென்றது. அதில் 7 பேர் படுகாயமடைந்ததானர். அவர்கள் அனைவரும் லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். இதில், உத்தரப்பிரதேச மாநிலத்தின் காஜியாபாத்தைச் சேர்ந்த 22 வயது பெண் சீதா தேவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பொதுமக்கள் காரை விரட்டிப் பிடித்து காரை கடுமையாகச் சேதப்படுத்தினர்.
மேலும், டிரைவரையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர் குடித்து விட்டு காரை ஓட்டியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வீடியோவில் பதிவாகியுள்ளது. வேகமாக வரும் கார், கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று, அங்கிருந்த கடை ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, பொதுமக்கள் சுற்றிவளைத்ததும், மீண்டும் வேகமாகச் செல்வது பதிவாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY