மகாசிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்! – ராஜஸ்தானில் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா என்ற இடத்தில் இன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு ஊர்வலம் நடத்துவதற்காக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கூடியிருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் 20 அடி நீளமுள்ள இரும்பு பைப் ஒன்றை வைத்திருந்தான். அந்த பைப் எதிர்பாராத விதமாக அப்பகுதி வழியாகச் சென்ற மின் கம்பத்தில் பட்டது. இதனால் சிறுவனை மின்சாரம் தாக்கியது. உடனே அவனை காப்பாற்ற அங்கு நின்ற மற்ற சிறுவர்களும் முயன்றனர். இதனால் அவர்களையும் மின்சாரம் தாக்கியது. மொத்தம் 15…