”குலசையில் புதிய ஏவுதளம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடக்கம்”- இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்
குலசேகர பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பதற்கான முதல் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நில அளவு, தண்ணீர் சுற்றுச்சூழல், ராக்கெட் ஏவுதளம் முதலிய அடிப்படை வசதி போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார். ஒரு புவி நோக்கு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி வரிசையின் 56ஆவது ராக்கெட்டான PSLV C54 ராக்கெட் ஏந்திச் சென்றது. அந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றதை அடுத்து, தொடர்ச்சியாக அடுத்தடுத்த ராக்கெட்டுகளை அனுப்பும் முயற்சியில் வேகம் காட்ட முடிவெடுத்துள்ளது…