இராவண கோட்டம் விமர்சனம்: பழக்கப்பட்ட கிராமத்துப் படம்தான், ஆனால் இப்படியான சித்திரிப்புகள் சரியா?
சாதி கலவரங்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலையும் சீமைக்கருவேல மரங்களுக்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் அரசியலையும் இரண்டு நண்பர்களின் வாழ்க்கை வழியாகப் பேசுகிறது `இராவண கோட்டம்’. இராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெருவின் பிரதிநிதியாக ‘இயங்கும்’ பிரபுவும், கீழத்தெருவின் பிரதிநிதியாக ‘இருக்கும்’ இளவரசுவும் உயிர் நண்பர்கள். ஊர்த் தலைவரைப் போலச் செயல்படும் பிரபுவின் பேச்சுக்கு மொத்த ஊரும் கட்டுப்படுகிறது. மறுபுறம், உயிர் நண்பர்களான இளவரசுவின் மகனுக்கும் மேலத்தெருவைச் சேர்ந்த சாந்தனு பாக்யராஜுக்கும், அவரின் காதலியான ஆனந்தியால் சண்டை…