செப்டிக் டேங்கை சுத்தம் செய்தபோது 5 தொழிலாளர்கள் பலி – மகாராஷ்டிராவில் சோகம்!
மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தில் உள்ள பவுசா தண்டா என்ற இடத்தில் பண்ணை வீடு ஒன்றில் இருந்த செப்டிக் டேங்கை சுத்தப்படுத்த 6 தொழிலாளர்கள் உள்ளே இறங்கினர். அவர்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மருத்துவமனையில் 5 தொழிலாளர்கள் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்கள். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் விஷ வாயு தாக்கி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்….