Tamil News Live Today: “இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது வெட்கக்கேடானது” – திமுக-வைச் சாடிய இபிஎஸ்
“இயந்திரம் மூலம் மது விற்பனை செய்வது வெட்கக்கேடானது” – தி.மு.க-வைச் சாடிய இபிஎஸ் தானியங்கி இயந்திரம் மூலம் மதுபான விற்பனையைத் தொடங்கியிருக்கும், தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் தானியங்கி இயந்திரம் மூலம், மதுபான விற்பனையைத் தொடங்கியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்! ஆருத்ரா கோல்டு மோசடியில் எனக்குத் தொடர்பிருப்பதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறிய…