ஆளுநர் குறித்த அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆளுநர் குறித்து திமுக மேடையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். முதல்வர் இது போன்ற பேச்சுகளை ஆதரிக்க மாட்டார் எனக் கூறியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் கணினி கல்வியகம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், ”தை முதல் நாளினை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தற்கு பல காரணங்கள் உண்டு. மறைமலை…