“இனி தேர்தலில் போட்டியிட முடியாது..!” – எடியூரப்பாவின் முடிவு பாஜக-வுக்குப் பின்னடைவா? – ஓர் அலசல்
கர்நாடகத்தில் மூன்று மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், நாள்தோறும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத வகையில் அரசியல் களம் மாறியிருக்கிறது. இந்த நிலையில், மாநிலத்தில் பா.ஜ.க-வின் ‘ஐகான்’ ஆக இருக்கும் எடியூரப்பா, ‘இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என அறிவித்திருப்பது, பேசுபொருளாகியிருக்கிறது. எடியூரப்பாவின் இந்த முடிவுக்கான காரணம் என்ன, அவரின் இந்த முடிவினால் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்படுமா… என்பது குறித்து பார்ப்போம். நான்கு முறை முதல்வர்! கர்நாடக மாநிலம், சிமோகோ மாவட்டத்தைச் சேர்ந்த எடியூரப்பா, ஜனதா கட்சியில் தன் அரசியல்…