டெஸ்ட் போட்டிக்கும் டி20 பிளேயர்ஸ் தானா? ரஞ்சி தொடரை எதுக்கு நடத்திகிட்டு! இவர்களின் நிலை?
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. இந்நிலையில், ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை விட்டுவிட்டு, டெஸ்ட் அணிக்குள் டி20 வீரர்களை எடுப்பது என்பது ரஞ்சிகோப்பையையே அசிங்கப்படுத்துவது போலவும், பின் எதற்காக ரஞ்சிக்கோப்பை போன்ற தொடரை நடத்தவேண்டும் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு, இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் அடுத்தடுத்து பங்குபெற்று…