”உங்கள ஊரவிட்டு ஒதுக்கி வைக்குறோம்” – ஊர்மக்கள் முடிவால் தற்கொலைக்கு முயன்ற குடும்பம்!
ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக பூம்புகார் மீனவ கிராமத்தினர் ஊர்விலக்கம் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீனவ குடும்பத்தினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் நடுத்தெருவை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் 2 ஆண்டுக்கு முன்பு ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக இவரை கிராம நாட்டாமை பஞ்சாயத்தினர் குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும், மீன்பிடித் தொழிலுக்கு செல்ல இவரை யாரும் உடன் அழைத்துச்…