கழிவுநீர் ஆறாக உருமாறி வரும் பாலாறு! உயிர்ப்பிக்குமா தமிழக அரசு?
கர்நாடக மாநில நந்திதுர்கத்தில் தான் பாலாறு பிறக்கிறது. அம்மாநிலத்தில் 93 கி.மீ. பயணித்து, ஆந்திராவில் 33 கி.மீ. கடந்து வந்து, தமிழகத்தில் அதிகப்படியாக 222 கி.மீ. என மொத்தமாக 348 கி.மீ. தூரம் தடம் பதிக்கிறது பாலாறு. இறுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் வயலூர் முகத்துவாரத்தை அடைந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பாலாற்றினால் தமிழகத்தில் 32 ஆயிரத்து 746 ஹெக்டேர் நிலங்கள் பயனடைகின்றன. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மட்டும் 150 ஏரிகள் பாலாற்றின் மூலம் நீர் பெற்று அவற்றின்…