“நான் அம்பேத்கர் மாதிரி ஆகணும்” – Dhammam பட சிறுமி பூர்வதாரணி பேட்டி
`கர்ணன்’ படத்தில் முகம் காட்டாத காட்டுப் பேச்சியாக வந்து ‘யார் அந்தக் குட்டிப் பொண்ணு?’ என பேசவைத்தவர் பூர்வதாரணி, சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ’தம்மம்’ படத்தில் தைரிய தாரணியாக நடித்து மீண்டும் பிரமிக்க வைத்திருக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் உறவினரான பூர்வதாரணியை சென்னை ஆவடி அருகிலுள்ள கர்லபாக்கம் (பா.ரஞ்சித்தின் ஊரேதான்) கிராமத்தில் சந்தித்துப் பேசினோம். பேசும்போதுதான் தெரிந்தது பூர்வதாரணியின் ’உண்மை முகம்’. “எனக்கு நடிக்கணும்ங்குற ஆர்வம் எல்லாம் இல்ல. வானம் கலை திருவிழாவுக்கு அடிக்கடி போவோம். அங்க…