‘5 கட்ட சோதனைக்குப் பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்படும்’ – இஸ்ரோ தலைவர் சோமநாத்
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் விண்வெளிப் பயணத் திட்டம் ‘ககன்யான்’ ஐந்து கட்ட ஆளில்லா சோதனைக்குப் பின் மனிதனுடன் விண்ணுக்கு செல்லும்” எனக் கூறியுள்ளார் இஸ்ரோ தலைவர் சோமநாத். மூன்று செயற்கைக் கோள்களை தாங்கியபடி, பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத் , ”விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட…