மதுரை: உற்சாகமாக நூற்றக்கணக்கானோர் பற்கேற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா
மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்று மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தில் உள்ள சாவட்டான் கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விவசாயம் செழிக்க மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம், இந்நிலையில், இன்று மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில், மீன்களை பிடிப்பதற்காக நள்ளிரவு முதலே ஏராளமான பொதுமக்கள் கண்மாய் கரையில் காத்திருந்தனர். இதையடுத்து அதிகாலையில் கிராம பெரியவர்கள் வெள்ளை துண்டை வீசியவுடன் ஒற்றுமையாக…