சேலம்: காவல்துறை ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தீக்குளிப்பு
சேலத்தில் காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்ததால் ஓட்டுநர், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அரசமரத்து கரட்டூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவர், கொண்டலாம்பட்டி அருகே மதுபோதையில் ஆட்டோ ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அவரது ஆட்டோவை மடக்கிய காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, ஆட்டோவை பறிமுதல் செய்ததாக தெரிகிறது. இதனால், அங்கிருந்து சிறிது தூரம் நடந்துசென்ற ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ், நடு சாலையில்…