இரவு நேரங்களில் பறக்கும் மர்ம ட்ரோன் விமானங்கள்… ஜம்மு எல்லையில் நடப்பது என்ன?
இரவு நேரங்களில் தினமும் ஆளில்லாத ட்ரோன் விமானங்கள் மர்மமான முறையில் பறப்பது ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உளவுத்துறை மற்றும் போலீசார் திரட்டி உள்ள தகவல்களின்படி கடந்த மூன்று நாட்களில் மட்டும் 9 ட்ரோன் விமானங்கள் பல்வேறு பகுதிகளில் காணப்பட்டுள்ளன. இந்த விமானங்களை இயக்குவது யார், என்ன காரணத்துக்காக இந்த ட்ரோன்கள் இயக்கப்படுகின்றன என்பது மர்மமாகவே உள்ளதால் பொதுமக்களும் பீதியடைந்துள்ளனர். ஜம்மு நகரம், காஷ்மீரின் பல பகுதிகளில் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள…