திருச்சி: `பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது 5 மாணவிகள் பாலியல் புகார்! பேராசிரியர் சஸ்பெண்ட்!’
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வருக்குக் கடிதம் எழுதியிருக்கும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மலைக்கோட்டை திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றி வந்தவர் பேராசிரியர் பால் சந்திரமோகன். அவரிடம் படிக்கும் முதலாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவிகள் ஐந்து பேர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் நடந்து கொள்ளும் முறையை ஐந்து பக்கத்திற்குக் கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்தக்…
பரபரக்கும் பஞ்சாப் அரசியல்: சித்து – அம்ரீந்தர் சச்சரவை தீர்க்க காங். தலைமை தீவிரம்!
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் தேசிய தலைமை தீவிரமாக களமிறங்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி, டெல்லியில் முகாமிட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்துவை ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் சமரச செய்யும் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமையன்று சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பஞ்சாப் மாநில காங்கிரஸ் நிலவரம் குறித்து தீவிர ஆலோசனை…