“அணில்களால் மின்தடை ஏற்பட்டதாக நீங்கள் நீதிமன்றத்தில் கூறியது பொய்யா?” – செந்தில் பாலாஜி
தமிழ்நாட்டில் மின் தடை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. “13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்படி பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார். தங்களது ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள்…