உத்திரமேரூர் கோயில் நகை குறித்து அரசே முடிவு செய்யும் – அமைச்சர் பாண்டியராஜன்
100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நகைகள் என்றால் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில் கிராம மக்கள் திருப்பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று கருவறையின் முன்பு இருந்த படிக்கல்லை அப்புறப்படுத்தியபோது துணியால் சுற்றப்பட்ட நிலையில் பழங்கால ஆபரணங்கள் கிடைத்தன. 561 கிராம் எடையுள்ள அந்த பழங்கால ஆபரணங்கள் குறித்து தகவலறிந்த உத்திரமேரூர் வட்டாட்சியர் ஏகாம்பரம், அவற்றை கைப்பற்றச் சென்றபோது அவற்றை ஓப்படைக்க மக்கள் மறுத்தனர். மேலும் புதிதாக கோயில்…