மதுரையில் கண்மாய் நீருடன் கலக்கும் கழிவுநீர்: 20 அடி உயரத்திற்கு பொங்கியெழும் நுரை!
மதுரையில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் செல்லூர் கண்மாயில் இருந்து வெளியேறும் நீரில் 15 அடி உயரத்திற்கு நுரை பொங்கி காட்சியளிக்கிறது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக மதுரை செல்லூர் கண்மாய்க்கு, குலமங்கலம், ஆலங்குளம், பனங்காடி, கோசாகுளம், ஆகிய குளங்களில் இருந்து நீர்வரத் தொடங்கியது. இந்நிலையில் நீர்வரத்து கால்வாய்களில் கழிவுநீர் நேரடியாக கலப்பதால் வெளியேறும் தண்ணீரில் 15அடி முதல் 20அடி உயரம் வரை நுரை பொங்கி…