தஞ்சை: ஆன்லைனில் ஜமாபந்தி நடத்துவது நியாயமா? -சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்
ஜமாபந்தி: மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மன்னர்கள், ஆங்கியேர்கள் ஆட்சிக்காலம் எனத் தொன்று தொட்டு, ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்களால் நீண்டநாள்களாக இழுத்தடிக்கப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கும் புகார்களுக்கும் ஜமாபந்தியில் பெரும்பாலும் தீர்வு கிடைத்துவிடும். இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியானது, கிராமப்புற மக்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் மக்கள் தங்களது மனுக்களை ஜமாபந்தி கூட்டத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் ஜமாபந்தியின் அடிப்படையான நோக்கம்…