ஊரடங்கு நடுவே 70 வயதில் வீதிக்கு விரட்டப்பட்ட மூதாட்டி – ஆதரவளித்த ரயில்வே அதிகாரி!
பெற்ற மகனால் தெருவில் கைவிடப்பட்ட 70 வயது பாட்டிக்கு ரயில்வே அதிகாரி ஒருவர் உணவளித்து, பத்திரமாகச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளச் சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. லீலாவதி கேதர்நாத் துபே (70) என்பவரது மகன் தினேஷ் குமார் துபே. இவர் மும்பையில் ஆட்டோ ஓட்டிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்ட தினேஷ், உடல்நலக் குறைவால் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனைக் கேள்விப் பட்ட அவரது தாய் லீலாவதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்குச்…