பிரிட்டன் செய்த கொடுமைகளை மறக்க முடியுமா? 2ம் எலிசபெத் மரணமும் காலனிய ஆட்சி நினைவுகளும்
காலச்சக்கரம் எவ்வளவு வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அப்படியே டைம் மிஷினை நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுழற்றி பார்த்தால் இந்தியா நெருப்பாற்றில் நீந்திய காட்சிகளை நம்மால் காண முடியும். வரலாற்றின் ஆறாத வடுக்களான பல கொடுந்துயரங்கள் அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்ததை காண நேர்ந்தால் பாரதியார் சொல்வது போல் நாம் விம்மி விம்மி அழ நேரிடும். வரலாற்றில் எத்தனையோ பேர் வெளியில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்தியாவின் தன்மைக்கு ஏற்றவாறு மாறி இந்தியர்களாவே மாறிப்போனார்கள். ஆனால், பிரிட்டன் மட்டுமே இறுதிவரை…