Top News

மதுரவாயால், வாலாஜாவில் ஜனவரி 18 வரை 50% சுங்கக் கட்டணம் வசூல் செய்க: உயர்நீதிமன்றம்

ஜனவரி 18 வரை மதுரவாயல், வாலாஜா சுங்கச்சாவடிகளில் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என கடந்த ஆண்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் டிசம்பர் 9ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 10 நாட்களில் 50 கோடி ரூபாய் செலவில்…

Read More
Top News

“இந்திய அணிக்கு உதவ டிராவிடை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்பியாக வேண்டும்”-திலீப் வெங்சர்கார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ள இந்திய அணிக்கு உதவ ராகுல் டிராவிடை  உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தை (பிசிசிஐ) வலியுறுத்தியுள்ளார்.  “இந்திய அணி வீரர்களுக்கு உதவும் வகையில் பிசிசிஐ டிராவிடை ஆஸ்திரேலியாவுக்கு வெகு விரைவில் அனுப்ப வேண்டும். ஆஸ்திரேலிய சுழலில் நகர்ந்து  வரும் பந்தை எப்படி விளையாடுவது என்பது குறித்த புரிதலை பேட்ஸ்மேன்களுக்கு கொடுத்து, சிறப்பாக வழிநடத்த அவரால் மட்டுமே முடியும். அதோடு அவரது…

Read More
Top News

கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சுகொண்டப்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த ஐந்து பெண்கள் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் கனகபுரம் பகுதியில் இருந்து தப்பகுலியில் உள்ள கோயிலுக்கு செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  ஓசூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு செல்லும்போது டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. அதில் டிராக்டரில் பயணித்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தவிர டிராக்டரில் பயணித்த 10க்கும் மேற்பட்டவர்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.