கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சுகொண்டப்பள்ளி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் அதில் பயணித்த ஐந்து பெண்கள் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் கனகபுரம் பகுதியில் இருந்து தப்பகுலியில் உள்ள கோயிலுக்கு செல்லும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

image

ஓசூரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு செல்லும்போது டிராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. அதில் டிராக்டரில் பயணித்த 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தவிர டிராக்டரில் பயணித்த 10க்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

விபத்து ஏற்பட்ட இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்பு பணியை மேற்கொள்வதில் சற்று சிரமம் உள்ளது என்று உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.