’குலசேகரபட்டினம் உலகிலேயே மிகச்சிறந்த ஏவுதளமாக இருக்கும்’ – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
குலசேகரபட்டினம் ஏவுதளம் உலகிலேயே மிகச்சிறந்த ஏவுதளமாக இருக்கும் என விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணதுரை, விண்வெளி துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை செய்துள்ளது என்றார். மேலும், விண்வெளி துறையில் சிறந்து விளங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளதாகவும், 36 நாடுகளுக்கு சொந்தமான 340 செயற்கை கோளை விண்ணில் நாம் ஏவியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்தாண்டு இந்திய மாணவர்கள் தயாரித்த 75…