தீப்பிடிக்கும் மின்சார வாகனங்கள் – மத்திய அரசு எடுத்த புதிய முடிவு
அண்மைக் காலங்களில் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த நிலையில், மின்கலன்களுக்கான பரிசோதனை முறைகளில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரிய பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, பேட்டரியில் இயங்கும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டின் வேலூர் உள்ளிட்ட இடங்களில் மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒலா, ஒகினாவா, ஜித்தேந்திரா எலெக்ட்ரிக், Pure EV ஆகிய நிறுவனங்களுக்கு…