இரவில் சிறிது நேரம் செயலிழந்த வாட்ஸ்அப் சேவை
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் நேற்றிரவு வாட்ஸ்அப் செயலி சிறிது நேரம் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்தனர். ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியின் சேவை நேற்றிரவு திடீரென செயல்படாமல் போனது. வாட்ஸ்அப் இயங்கவில்லை என்று இரவு 9.15 மணியளவில் அந்நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது. அடுத்த 45 நிமிடத்திற்குள் சுமார் 30 ஆயிரம் பேர் வாட்ஸ்அப்பை பயன்படுத்த முடியவில்லை என்று பயனர்கள் தெரிவித்தனர். குறிப்பாக இந்தியாவில் சுமார் ஒரு மணி நேரம் வாட்ஸ்அப் சேவை முடங்கியதால்…