“எனக்கு ஏன் அழைப்பு இல்லை “.. மாநகராட்சி கமிஷனர் மீது சேலம் திமுக எம்பி பகிரங்க புகார்!
அரசு நிகழ்ச்சிகளில் தனக்கு அழைப்பு கொடுப்பதில்லை என்றும் அதையும் மீறி அழைப்பு கொடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள் என்றும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக சேலம் எம்.பி.யாக உள்ள எஸ்.ஆர். பார்த்திபன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”சுயமரியாதை என் உயிரினும் மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் எம்.பிக்கு அழைப்பு கொடுக்க கூடாது; அதையும் மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள், கழகத்…